
- Editor: டாக்டர் கி. வீரமணி
- Available in: Kindle
- ISBN: B08SWJCD3W
தம் வாழ்நாளில் மக்கள் நடுவில் பல்லாயிரக்கணக்கான கூட்டங்களில், அதுவும் தொண்ணூறு வயதைக் கடந்தும் பேசியவர் உலகில் வேறு எவரும் இலர்! பேச்சைப் போலவே இவர் எழுதுவதையும் தொடர்ந்து கொண்டிருந்தார். தந்தை பெரியார் எத்துணையளவு ஆழ்ந்தகன்று சிந்தித்துள்ளார் என்பதை நன்கு உணரலாம்.
இத்தொகுப்பில் தொழிலாளரைக் குறித்தும், தொழிற்சங்கம் குறித்தும் ஏறக்குறைய 33 கட்டுரைகள் உள்ளன. பெண்ணியம் குறித்து 14 கட்டுரைகள் உள்ளன. சமதர்மம் குறித்து 21 கட்டுரைகள் உள்ளன. நாத்திகம் குறித்து 3 கட்டுரைகளும், மே தினம் குறித்து 5 கட்டுரைகளும் உள்ளன. ஏனைய கட்டுரைகள் பற்பல தலைப்புகளில் பொதுவுடைமையை அலசுகின்றன.