தலைவர் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கடந்த முப்பதாண்டு கால அரசியல் – பொது வாழ்வு திராவிடத்தின் சரிதத்திலேயே முக்கிய ஓர் பகுதியாகும். பன்னெடுங் காலத்திற்கு முந்திய கடவுளும், மதமும், இன்றை – நாளை நம் மக்கள் அரசியல் – சமுதாய வாழ்வும் அவர் ஆராய்ச்சி முடிவுக்கு இலாக்காகி இருக்கின்றன.
எனவே, அவரின் பேச்சு – எழுத்துக்களில் சிந்திய ஆயிரமாயிர முத்துக்களில் சேகரித்த சிலவற்றை பொன் மொழியாக்கி, திராவிட மக்களுக்கு அளித்துள்ளோம்; பயன் பெறுவராக.