நெருஞ்சி இலக்கிய விருது பெற்ற நாவல்
மூக்குத்தி காசி எனும் திருநங்கையின் உடல் முதல் 10 நாட்கள் ஆணாகவும், இரண்டாம் பத்து நாட்கள் பெண்ணாகவும், மூன்றாம் 10 நாட்கள் திருநங்கையாகவும் உருமாறுகின்றன. அந்த நாட்களில் மூக்குத்தி காசி சந்திக்கும் மனிதர்கள், சமூகக் கொடுமைகள் போன்றவற்றின் தொகுப்பே இந்த நாவல். சிறு வயதில் தாய் தந்தையரை இழந்த பின் ‘பெரியார் அப்பா’ எனும் பெரியாரிஸ்ட் ஒருவரால் வளர்க்கப்பட்டதால், பின்னாட்களில் தமிழ்த் தேசியவாதியுடனும், மதவாதியுடனும், பெரியாரிய கருத்துப் போரை நிகழ்த்துகிறான். நாவலின் மைய ஓட்டமாக பெரியாரிய மார்க்சிய அரசியல் இருக்கிறது.